Header Ads Widget

Responsive Advertisement

உனக்கு நிகரானவர் யார் ? - இந்த


பல்லவி
உனக்கு நிகரானவர் யார் ? - இந்த
உலக முழுவதிலுமே .

அனுபல்லவி
தனக்கு தானே நிகராம் தாதை திருச் சுதனே
மனுக்குலம் தன்னை மீட்க மானிடனாக வந்த -உனக்கு

சரணங்கள்
1.தாய் மகளுக்காக சாவாளோ - கூடப் பிறந்த
தமையன் தம்பிக்காய் மாய்வானோ?
நேயன் நேயர்க்காய் சாவானோ? தனதுயிரை
நேர் விரோதிக்காய் ஈவானோ?
நீ இம் மண்ணுலகில் நீசர்கட்காக வந்து
காயும் மனமடவர்க்காக மரித்தாய் சுவாமி .- உனக்கு .

2. கந்தை உரிந்தெறிந்தனை - நீதியின் ஆடை
கனக்க உடுத்துவித்தனை,
மந்தையில் சேர்த்துவைத்தனை , கடும் வினைகள்
மாற்றி எந்தனைக் காத்தனை;
கந்த மலர்ப் பாதனே ,கனக ரத்ன மேருவே ,
சிந்தை உவந்து வந்த தியாக ராசனே , சுவாமி - உனக்கு


Post a Comment

0 Comments