Header Ads Widget

Responsive Advertisement

கண்டேனென் கண் குளிர


பல்லவி
கண்டேனென் கண் குளிர -கர்த்தனை யின்று

அனுபல்லவி
கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் -கண்

சரணங்கள்
பெத்தலேம் -சத்திர முன்னணையில்
உறறோக- குயிர் தரும் உண்மையாம் என் ரட்சகனைக் -கண்

தேவாதி -தேவனை, தேவசேனை
ஓயாது -தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் - கண்

பாவேந்தர்- தேடிவரும் பக்தர் பரனை ,
ஆவேந்தர் -அடிதொழும் அன்பனை, என் என்பனை நான் -கண்

முத்தொழிற் -கர்த்தாவாம் முன்னவனை,
இத்தரை - மீட்க எனை நடத்தி வந்த மன்னவனைக் - கண்

மண்ணோர் -இருள்போக்கும் மாமணியை ,
விண்ணோரும் -வேண்டி நிற்கும் வின்மநியைக் , கண்மணியைக் -கண்

அண்டினோர்க் -கன்புருவாம் ஆரணனை ,
கண்டோர்கள் -கவிதீர்க்கும் காரணனை,பூரணனைக் -கண்

அன்னையாம் -கன்னியும் ஐயனுடன்
முன்னறி -யாப்பசுவின் புல்லணையில் உன்னழகைக்- கண்

Post a Comment

0 Comments