கர்த்தர் தாமே நம் பின்வந்து காப்பார்
நாமவர் உடமை இனி இல்லையே தனிமை
எங்கும் இனிமை தினம் காண்போம் புதுமை(2)
உதவிடும் கன்மலை இயேசுவை நோக்குவோம்
விலகிடார் கைவிடார் தாங்குவார் உறங்கிடார்(2)
உயிர்தரும் மாயனே சுகம்தரும் நேயனே
கனிவுடன் நடத்துவார் பரிவுடன் தேற்றுவார்(2)
உலகுக்கு வெளிச்சம் நாம் பூமிக்கு உப்பு நாம்
மரிக்கும் வித்து நாம் பரமனின் சொத்து நாம்(2)
0 Comments