Header Ads Widget

Responsive Advertisement

அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்


பல்லவி
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்? -அதிசய
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்.

அனுபல்லவி
துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம் .-
சரணங்கள்
இதுவென் சரீரம் இதுவென்றன் ரத்தம்
எனை நினைந்திடும்படி அருந்துமென்றாரே. - அதிசய
பிரிந்திடும் வேளை நெருங்கினதாலே
வருந்தின சீடர்க்காய் மருகி நின்றாரே-அதிசய
வியாழ னிரவில் வியாகுலத்தோடே
விளம்பின போதகம் மறந்திடலாமோ?- அதிசய
செடியும் கொடியும் போல் சேர்ந்து தம்மோடே
முடிவு பரியந்தம் நிலைப்பிரென்றாரே.- அதிசய
பக்தர்கட்காகப் பரமனை நோக்கி
மெத்தவும் ஊக்கமாய் வேண்டிக்கொண்டாரே-அதிசய

Post a Comment

0 Comments