Header Ads Widget

Responsive Advertisement

நம்பி வந்தேன் மேசியா நான் நம்பி வந்தேனே


நம்பி வந்தேன் மேசியா நான் நம்பி வந்தேனே ,-திவ்ய
சரணம்! சரணம்! சரணம் ஐயா, நான் நம்பி வந்தேனே .

சரணங்கள்
தம்பிரான் ஒருவனே , தஞ்சமே தருவனே;- வரு
தவீது குமார குரு பரமனுவேலே , நம்பி வந்தேனே ,-

நின்பாத தரிசனம் அன்பான கரிசனம் ;- நித
நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் நம்பி வந்தேனே .-

நாதனே கிருபை கூர் ; வேதனே , சிறுமை தீர் ,- அதி
நலம் மிகும உனதிரு திருவடி அருளே நம்பி வந்தேனே.-

பாவியில் பாவியே , கோவியில் கோவியே கண
பரிவுடன் அருள் புரி அகல விடாதே; நம்பி வந்தேனே,-

ஆதி ஓலோலமே பாதுகா காலமே; உன
தடிமைகள் படு துயர் மெத்த நம்பி வந்தேனே

Post a Comment

0 Comments