Header Ads Widget

Responsive Advertisement

ஆண்டவர் பங்காக அனைத்தையும்


பல்லவி
ஆண்டவர் பங்காக அனைத்தையும் ,அவர்க்கே ,
அன்பர்களே ,தாரும்; -அதால் வரும்
இன்பந்தனைப் பாரும் .


அனுபல்லவி
வான்பல கனிகளைத் திறந்தாசீர்
வாதங்கள் இடங்கொள்ளாமற் போகுமட்டும்
நான் தருவேன் ,பரிசோதியுங்களென்று
ராஜாதிராஜ சம்பூரணர் சொல்வதால்- ஆண் 



சரணங்கள்
வேதாளராஜன் அருஞ்சிறை மீட்டாளும்
விண்ணவர் கோமானே -அந்த
மேதகத்தை நன்றி ஞாபகம் செய்திட
விதித்தது தானே .
வேதனம் ,வியாபாரம் ,காலி , பறவையில் ,
வேளாண்மை , கைத்தொழில் ,வேறுவழிகளில் ,
ஊதியமாகும் எதிலும் அவர் பாகம்
உத்தமமாக பிரதிஷ்டை பண்ணியே .-ஆண் 




ஆலயங் கட்ட, அருச்சனை செய்ய
அருட்பணி பேண, -தேவ
ஊழியரைத் தாங்கி உன்னத போதனை
ஓதும் நன்மை காண ,
ஏழைகள் ,கைம்பெண்கள் ,அனாதப்பாலர்கள்
எதுகரமற்ற ஊனர், பிணியாளர்,
சாலவறிவு நாகரீக மற்றவர்
தக்க துணைபெற்றுத் துக்கமகன்றிட .-ஆண் 




நம்மைப் படைத்துச் சுகம் பெலன் செல்வங்கள்
யாவும் நமக்கீந்து ,-நல்ல
இம்மானுவே லென்றொரு மகனைத் தந்து
இவ்வாறன்பு கூர்ந்து ,
நன்மை புரிந்த பிதாவைக் கணம் பண்ண
நம்மையும் நம்முட யாவைய மீந்தாலும்
சம்மதமே அதிலும் தசம பாகம்
தாவென்று கேட்கிறார் ; மாவிந்தையல்லவோ? -ஆண்

Post a Comment

0 Comments