Header Ads Widget

Responsive Advertisement

இயேசுவை நாம் எங்கே காணலாம்?

 
பல்லவி
இயேசுவை நாம் எங்கே காணலாம்?
அவர் பேசுவதை எங்கே கேட்கலாம் ?


அனுபல்லவி
பனிபடர்ந்த மலையின் மேல் பார்க்க முடியுமா ?
கனி நிறைந்த சோலை நடுவே காண முடியுமா?

சரணம்
ஓடுகின்ற அருவியெல்லாம் தேடி அலைந்தேனே
ஆடுகின்ற அலைகடலில் நாடி அலைந்தேனே
தேடுகின்ற என் எதிரே தெய்வத்தைக் காணேனே
பாடுபடும் ஏழை நான் அழுது வாடினேனே - இயேசு

வானமதில் பவனிவரும் கார்முகில் கூட்டங்களே
வந்தருளும் இயேசுவையே காட்டிட மாட்டீரோ
காலமெல்லாம் அவனியில் வீசும் காற்றே நீ
கர்த்தர் இயேசு வாழுமிடம்  கூறிட மாட்டாயோ- இயேசு

கண்ணிரண்டும் புனலாக நெஞ்சம் அனலாக
மண்டியிட்டு வீழ்ந்தேன் நான் திருமறை முன்பாக
விண்ணரசர் அன்புடனே கண்விழிப்பாய் என்றார்
கண்விழித்தேன் என்முன்னே கர்த்தர் இயேசு நின்றார் -இயேசு 

Post a Comment

0 Comments