Header Ads Widget

Responsive Advertisement

காலையில் தேவனைத் தேடு


பல்லவி
காலையில் தேவனைத் தேடு ;-ஜீவ
காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு .

அனுபல்லவி
சீலமுடன் பதம் பாடிக் கொண்டாடு ,
சீரான நித்திய ஜீவனை நாடு .- காலையில்

சரணங்கள்
மன்னுயிர்க்காய் மரித்தாரே ,-மனு
மைந்தனென நாமம் வைத்திருந்தாரே ;
உன் சிருட்டிகரை நீ உதயத்தில்லெண்ணு
உள்ளங் கனிந்து தனி ஜெபம் பண்ணு .- காலையில் 


பாவச் சோதனைகளை வெல்லு ;-கெட்ட
பாருடல் பேயுடன் போருக்கு நில்லு ;
ஜீவ கிரீடஞ் சிரத்திலணியச்
சிந்தனை செய் ;மனுவேலனைப் பணிய .-காலையில் 


சிறுவர்கள் என்னிடஞ் சேரத் -தடை
செய்யா திருங்களென்றார் மனதார ;
பரலோக செல்வ மவர்க்கு பலிக்கும் ;
பாக்கியமெல்லாம் பரந்து ஜொலிக்கும் -காலையில்


வேலையுனக்குக் கைகூட -சத்ய
வேதன் கிருபை வரத்தை மன்றாட ,
காலை தேடுவோர் எனைக் கண்டடைவாரே ,
கண் விழித்து ஜெபஞ் செயும்மென்றரே -காலையில்

Post a Comment

0 Comments