Header Ads Widget

Responsive Advertisement

இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை


பல்லவி
இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த
எண்ணமாய்த் தோத்திரிப்போமாக.

அனுபல்லவி
நம்மை ரட்சிக்க வந்து தம்மை பலியாய்த் தந்து
நற்சுகம் மேவவும் அற்புதமாகவும் .-இம்


சரணங்கள்
காலம் சொல் போல் கழியும் ,தண்ணீரைப் போல் வடியும் ,
கனாவைப் போலேயும் ஒழியும்;
வாலிபமும் மறையும் ,சீலம் எல்லாம் குறையும் ,
மண்ணின் வாழ் வொன்றும் நிற்க மாட்டாது ;
கோலப் புதுமைக்கும் , நீர் குமிழிக்கும் ,புகைகுமே
கொண்ட உலகத்தில் அண்ட பரன் எமைக்
கண்டு கருணைகள் விண்டு தயவுடன் .-இம்





பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம் ;
பரம பாதையைத் தொடர்ந்தோம் ;
வலிய தீமையை வென்றோம் ;நலியும் ஆசையைக் கொன்றோம் ;
வஞ்சர் பகைக்கும் தப்பி நின்றோம் ;
கவி என்ற தெல்லாம் விண்டோம் ;கர்த்தாவின் மீட்பைக் கண்டோம் ;
காய்ந்த மனதோடு பாய்ந்து விழு கணம்
சாய்ந்து கெடவும் ஆராய்ந்து நெறியுடன் .-இம்





சன தேசம் வருவிக்கும் கேடுகட்கோர் முடிவு
தந்து, நொறுங்கினதைக் கட்டிக்
கன சபையை ஆதரித் தன்பாய் ஆசிர்வதித்துக
கண்ணோக்கி எல்லார் மேல அன்றன்று
தினமும் அருள் உதிக்கச் செய்து ,தமது தேவ
மைந்தனால் எங்களை இந்த விநோதமாய் -இம்

Post a Comment

0 Comments