Header Ads Widget

Responsive Advertisement

விசுவாசியின் காதில் பட யேசுவென்ற நாமம்


பல்லவி
விசுவாசியின் காதில் பட யேசுவென்ற நாமம்
விருப்பாயவர் செவியில் தொனி இனிப்பாகுது பாசம் .


சரணங்கள்
பசித்த ஆத்துமாவை பசியாற்று மன்னாவதுவே ;
முசிப்பாறுதல் இளைத்தோர்க்கெல்லாம் முற்றும் அந்த பெயரே .- விசு


துயரையது நீக்கிக் காயமாற்றி குணப்படுத்தும் ;
பயங்கள் யாவும் யேசுவென்றால் பறந்தோடியே போகும் -விசு


காயப்பட்ட இருதயத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தும் ,
மாயை கொண்ட நெஞ்சையது மயக்கமின்றிவிடுக்கும் .-விசு


எல்லை இல்லாக் கிருபைத் திரள் ஏற்று நிறைந்திருக்கும் ,
எல்லா நாளும் மாறாச் செல்வம் யேசுவென்ற பெயரே .- விசு


என்னாண்டவா, என் ஜீவனே, என் மார்க்கமே ,முடிவே ,
என்னால் வருந்துதியை நீரே ஏற்றுக் கொள்ளும், தேவே .-விசு

Post a Comment

0 Comments