Header Ads Widget

Responsive Advertisement

யேசுவே கிரு பாசனப்பதியே


பல்லவி
யேசுவே கிரு பாசனப்பதியே ,கெட்ட
இழிஞன் எனை மீட்டருள் ,
ஏசுவே,கிரு பாசனப்பதியே


சரணங்கள்
காசினியில் உன்னை அன்றி ,தாசன் எனக் காதரவு
கண்டிலேன் ,சருவ வல்ல மண்டலாதிபா !
நேசமாய் ஏழைக்கிரங்கி,மோசம் அணுகாது காத்து
நித்தனே, எனைத் திருத்தி ,வைத்தருள் புத்தி வருத்தி ,-யேசு


பேயுடைச் சிறையதிலும் காய வினைக் கேடதிலும் , பின்னமாகச் சிக்குண்ட துர்க் கன்மி ஆயினேன் ;
தீயரை மீட்கும் பொருளாய் நேயம் உற்று திரம் விட்ட
தேவனே , எனைக் கண் நோக்கித் தீவினை அனைத்தும் நீக்கி , -யேசு



சிறைப்படுத்தின வற்றைச் சிறையாக்கி விட்ட அதி
தீரமுள்ள எங்கள் உப கார வள்ளலே ,
குறை ஏதுனை அண்டினோர்க் கிறைவா ? எனைச் சதிக்கும்
குற்றங்கள் அறவே தீர்த்து ,முற்று முடியக் கண் பார்த்து ,- யேசு



பொல்லா உலகம் அதில் நல்லார் எவரும் இல்லை ,
புண்ணியனே உம சரணம் நண்ணி அண்டினேன் ;
எல்லார்க்குள் எல்லாம் நீ அல்லோ எனக்குதவி ?
இந்நாள் அருள் புரிந்து உன் ஆவியைச சொரிந்து -யேசு

Post a Comment

0 Comments