Header Ads Widget

Responsive Advertisement

எத்தனை திரள் என் பாவம் என் தேவனே



பல்லவி
எத்தனை திரள் என் பாவம் என் தேவனே !
எளியன் மேல இரங்கையனே .
அனுபல்லவி
நித்தம் என் இருதயம் தீயதென் பரனே ;
நிலைவரம் எனில் இல்லை ;நீ என் தாபரமே ,-எத்

சரணங்கள்
பத்தம் உன் மேல எனக்கில்லை என்பேனோ ?
பணிந்திடல் ஒழிவேனோ ?
சுத்தமுறுங் கரம் கால்கள் ,விலாவில்
தோன்றுது காயங்கள் தூய சிநேகா!- எத்



என்றன் அநீதிகள் என் கண்கள் முனமே
இடைவிடாதிருக்கையிலே
உந்தன் மிகுங் கிருபை ,ஓ! மிகவும் பெரிதே
உத்தம மனமுடையோய் ,எனை ஆளும் !-எத் 



ஆயங் கொள்வோன் போல் ,பாவ ஸ்திரி போல்
அருகிலிருந்த கள்ளன் போல் ,
நேயமாய் உன் சரண் சரண் என வணங்கினேன்;
நீ எனக்காகவே மரித்தனை ,பரனே !-எத் 




கெட்ட மகன் போல் துட்டனாய் அலைந்தேன் ,
கெடு பஞ்சத்தால் நலிந்தேன் ;
இட்டமாய் மகன் என்ப பாத்திரன் அலன் நான்
எனை ரட்சித்திடல் உன்றன் நிமித்தமே ,அப்பனே ! -எத் 

Post a Comment

0 Comments