Header Ads Widget

Responsive Advertisement

(03) புனித மார்டின் லூத்தர் - ஜெர்மன் மொழியில் வேதம்

ஜெர்மன் மொழியில் வேதம்.

லூத்தருக்கு அரசுத் தடை விதிக்கப்பட்டது. அவரதுபாதுகாப்பு கருதி, அவரது நண்பர்கள் அவரைவார்ட்பர்க் அரண்மனைக்குக் கடத்திச்சென்றனர்.

ஜங்கர் ஜார்ஜ் என்ற புனைப்பெயரில் மார்ட்டின்லூத்தர் புதிய ஏற்பாட்டைக் கிரேக்கத்திலிருந்து ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்த்தார். மிக ஆச்சரியகரமாக, ஒருசில வாரங்களிலேயே இவ்வேலையைமுடித்தார். விட்டன்பர்க் நகரில் அவருக்கு நேரிட்டதொந்தரவுகளால், அவர் அரண்மனையை விட்டுவெளியேறி தன் இல்லம் வந்து, பின்னர் பழையஏற்பாட்டையும் மொழிபெயர்த்து முடித்தார்.

சாத்தான் மீது ‘ மை’ போர்!

அப்போதுதான், மார்ட்டின் லூத்தர், ஜெர்மானியமொழியில் வேதத்தை மொழிபெயர்க்கும் மறக்கவியலா மாபெரும் வேலையைத் தொடங்கியிருந்தார்.தனக்கு வந்துள்ள ஆபத்தை தெள்ளத்தெளிவாய்உணர்ந்த சாத்தான் மிக உக்கிரமடைந்தான். அவன்இரவு பகலாய் லூத்தரின் அமைதியைக் கெடுக்கமுயன்றான். பொறுமையிழந்த மார்ட்டின் லூத்தர்கடைசியில் தனது மைப் புட்டியை எடுத்து அவன்மீதுவீசினார். இன்றும் அந்த மை கறையைச் சுவரில்காணலாம். ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட தேவனது வார்த்தையே பிசாசுக்கு மரண அடி!

கி.பி. 150இல் மொழிபெயர்க்கப்பட்ட இலத்தீன்-இத்தாலிய மொழிபெயர்ப்புக்குப் பிறகு, மிக நேர்த்தியாகவும், துல்லியமாகவும் செய்யப்பட்ட வேத மொழிபெயர்ப்பு இதுவே. மற்ற மொழியாக்கங்களெல்லாம்இந்த அற்புத மொழிபெயர்ப்பின் நகல்களேயாகும்.

1522இல் புனித மார்ட்டின் விட்டன்பர்குக்குத்திரும்பினார். இங்குதான் வேதத்தின் அற்புதமான ஆங்கில மொழிபெயர்ப்பு வேலையைச் செய்தார்.ஜேம்ஸ் அரசர் ஆங்கில மொழியாக்கத்தின் (King James Version) 75 சதவீதம், ஆங்கிலேய மறுமலர்ச்சியாளர் வில்லியம் டிண்டேலின் கைவேலைதான். அந்தடிண்டேல் இங்குதான் மார்ட்டின் லூத்தரைச் சந்தித்துஅவரிடமிருந்து நிறைய எடுத்தெழுதிக் கொண்டார்.டிண்டேல் வேதத்தின் ஓரக்குறிப்புகள் அப்படியே லூத்தரின் மொழிபெயர்ப்பை ஒத்துள்ளது. கற்றறிந்தஸ்பானியர்கள் அநேகர் ஜெர்மானிய மொழியைக்கற்றிருந்ததால், மார்ட்டின் லூத்தரின் பாணி ஸ்பானிய மொழி பெயர்ப்புகளிலும் படிந்தது.

கன்னியாஸ்திரியாவது வேடிக்கையா?

கறைபட்ட உலகினின்று விடுபட்டு கர்த்தரின்மணவாட்டியாக மாற ஒரே வழி கன்னியாஸ்திரியாவதே என்று நம்பவைக்கப்பட்டு கன்னியர் மடத்துள்அநேகர் கைதிகளாயினர். குருவானவர்களின் ஆசைகளுக்கு பலியாகி, சில வேளைகளில் அவர்களது குழந்தைகளை வயிற்றில் சுமக்கவேண்டிய நிர்ப்பந்தம்தம்மேல் சுமத்தப்பட்டபோது, அவர்களது அதிர்ச்சி எத்தகையதாயிருந்திருக்கக்கூடும் எனக் கற்பனைசெய்துபாருங்கள். தப்பிக்க வழியேயின்றி மடத்தின்இருண்ட சுவர்களுக்குள் கொடூரமான மரணத்தின் வாயில் விழுந்தோர் அநேகர்.ஆசீர்வாதமாய் வந்த மறுமலர்ச்சியே, இந்தத் திகில்கொடுமையினை இங்கிலாந்திலும் ஜெர்மனியிலும்இல்லாதொழித்தது. சாம்ராஜ்யத்தின் தண்டனையின்கீடிந நிச்சயமற்றவாழ்வு வாழந்த லூத்தர் திருமணம் செய்துகொள்ளஆர்வம் கொள்ளவில்லை. கைது செய்யப்படவும்,உயிரோடு கொளுத்தப்படவும் எந்நேரமும் ஆயத்தமாகவே இருந்தார்.புனித காத்ரீனா என்கிற ஒரு கன்னியாஸ்திரியைத்தவிர, காப்பாற்றப்பட்ட அனைத்து கன்னியர்க்கும் மணவாளர் கிடைத்துவிட்டனர். புனித மார்ட்டின்லூத்தரைத் தவிர வேறு ஆளே இல்லை என்ற நிலைக்குவந்துவிட்ட காத்ரீனாவின் கரம்பற்றித் திருமணபந்தத்தில் இணைந்தார் லூத்தர்.இருண்ட, அடைபட்ட கன்னியர் மடத்தில் கன்னியர்கண்ணியம் காப்பது இயலாதென்று அறிந்து, லூத்தர்காப்பாற்றிய அற்புதமான மலர் காத்ரீனா, 1525ல்லூத்தரின் மனைவியானார். மறுமலர்ச்சிப் பணியில்நல்ல உதவியாளராய் மட்டுமல்ல, நான்கு குழந்தைகளின் மகிழ்ச்சிநிறைத் தாயாகவும் விளங்கினார்.

விட்டன்பர்கில் ‘ஒரு மனித சேனை!’

அவர் புரட்சியாளர், வேத மொழிபெயர்ப்பாளர்,எழுத்தாளர், வெளியீட்டாளர், அச்சடிப்பவர், பிரசங்கியார், அன்புநிறைக் கணவன், நான்கு குழந்தைகளின்ஆசைத் தகப்பன். கைகளினாலேயே அச்சுப்பணிமுழுவதும் செய்ய வேண்டிய கடின நாட்களிலேயே,அவரது எழுத்துக்கள் 100 தொகுதிகளைத் தாண்டிவிட்டன.

சரித்திரத்திலேயே, மிகவும் விஷம் ஊட்டப்பட்டமனிதர்களில் ஒருவர் மார்ட்டின் லூத்தர். புனிதபவுலுக்குப் பின் அதிக முறை விஷம் கொடுக்கப்பட்டமனிதர் லூத்தர்தான். 95 கோட்பாடுகளை வெளியிட்டஉடனேயே, அவரைக் கொல்லச் சதி செய்து “போர்ஜியா விஷம்” கொடுத்தனர். இவ்விஷத்தின் பலனால்அவரது ஜீரண உறுப்புக்கள் மீளமுடியாப் பாதிப்புக்குள்ளாயின. விஷம் ஒரு மனிதனை உடல் ரீதியாகமட்டுமல்ல, மன ரீதியாகவும் பாதிக்கக்கூடும். 63வயதில் அகால மரணம் எய்தும்வரைத் தேவன் அவரைவிஷத்தின் பாதிப்புகளிலிருந்து காத்துக்கொண்டார்.

Post a Comment

0 Comments