Header Ads Widget

Responsive Advertisement

(04) புனித மார்டின் லூத்தர் - இன்னொரு நெகேமியா!!

பழைய ஏற்பாட்டில் பாபிலோனிலிருந்த யூதர்களைவெளிக்கொணர்ந்து எருசலேம் வந்தடைய வழிநடத்திய தீர்க்கன், நெகேமியா. பாபிலோனியச் சிறைப்பிடிப்புக்குப் பின்னர், இடிந்த ஆலயத்தை கட்டிஎழுப்பவும், யேகோவா ஆராதனையைப் புதுப்பித்துநிலைநிறுத்தவும் எழுந்தவர் நெகேமியா.

“பிரசங்கிகளின் இளவரசன்” என லூத்தர் அழைக்கப்படுகிறார். நரகின் வாயடைக்கும் நாவன்மை பெற்றவர் அவர். அவரது பிரசங்கங்கள் மட்டுமே 100தொகுப்புகளைத் தாண்டிவிட்டன. பாபிலோனியச்சிறையிருப்பிற்குப் பின் யூதர்களின் ஆலயத்தைத்திரும்பவும் கட்டிய நெகேமியாவைப் போன்றவர்லூத்தர்! இவ்விருவருமே ஒரே அச்சில் வார்க்கப்பட்டவர்களாகவே காட்சியளித்தனர். அந்நிய இனத்தவளாகிய தன் மனைவியை விலக்கிவிட மறுத்த யூதன்ஒருவனை நெகேமியா கைநீட்டி அறைந்த செய்தியைபழைய ஏற்பாட்டில் வாசிக்கலாம். லூத்தர் ஒருவரையும்அடிக்கவில்லைதான்... ஆயினும், தனது பேச்சாலும்,எழுத்தாலும் போப்பின் ஆதிக்கத்தை ஆட்டங்காணவைத்துவிட்டார்.சாத்தானின் முகத்தில் நிறையவே மையடித்துவிட்டார், லூத்தர். மறுமலர்ச்சியாளனாய் வாடிநந்த தமதுவாடிநவில் 100 தொகுப்பு நூல்களையும், ஆயிரமாயிரம்பிரசங்கங்களையும் நமக்களித்துள்ளார். அவர் ஜெர்மனியில் மொழிபெயர்த்த பழைய ஏற்பாடு, ஓர் மாபெரிய காவியப்பணி!

கடைசி வார்த்தைகள்!!

1546 பெப்ருவரி 18 காலையில் பரம வீடு ஏகினார்லூத்தர். அவரது கடைசி வார்த்தைகள் இவைகளே:

லூத்தரின் கல்லறையின் அருகில் நின்றுகொண்டுஅவர் ஈல்பன் (Eisleben) நகரில் செலவழித்த கடைசிநாட்களை நினைத்துப்பார்க்கலாம். 1546 ஜனவரி28இல் அந்நகர் வந்தடைந்தார். உடல்நலம் குன்றியிருந்தபோதும் பெப்ருவரி 17 வரையிலும் நடைபெற்றமாநாடுகளில் கலந்துகொண்டார்; நான்கு பிரசங்கங்கள் செய்தார்; மான்ஸ்பீல்ட் பகுதிக்கான சபை ஒழுங்குகளைப் பரிசீலனை செய்தார். 17ஆம் தேதி அவர்உடல்நிலை மிகவும் கெட்டுப்போனதால், அவரதுநண்பர்களான பிரபுக்கள் அவரை வீட்டைவிட்டுவெளியே போக அனுமதிக்கவில்லை. அன்றிரவு உணவுவேளையில், தம்மை நெருங்கிவரும் மரணத்தைப்பற்றிவெகுவாகப் பேசினார். அவ்வேளையில், மறு உலகில்நாம் ஒருவரையொருவர் அடையாளங்கண்டுகொள்ளமுடியுமா? என எழுப்பிய வினாவுக்கு, “முடியும் என்றேநினைக்கிறேன்” எனப் பதிலுரைத்தார். “நான் ஏன்இவ்வளவு களைப்பாய் இருக்கிறேன்?” என ஆச்சரியப்பட்ட அவர், “என் வேதனை முன்பைவிட மிகுதியாயுள்ளது. ஒரு அரைமணி நேரம் தூங்கினால்சரியாகிவிடும்” என்று சொல்லி, தூங்கப்போனார்.ஒன்றரைமணி நேரம் கழித்து பதினொரு மணிக்குஎழுந்த அவர் சுற்றியுள்ளோரைப் பார்த்து, “என்ன!இன்னுமா இங்கிருக்கிறீர்கள்? உங்களுக்கு ஓய்வுவேண்டாமா?” எனக் கேட்டார்.

அங்கேயே இருக்கப்போவதாக அவர்கள் சொன்னபோது, லூத்தர் உணர்ச்சிவசப்பட்டுச் சத்தமிட்டார்:“என்னை மீட்டெடுத்த சத்தியபரனாகிய கர்த்தாவே,உமது கரங்களில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்.அன்பு நண்பர்களே, ஆண்டவரின் நற்செய்திக்காகவும்,அதன் ஆளுகை விரிவாக்கத்திற்காகவும் ஜெபியுங்கள். ஏனெனில், சபைச் சங்கமும் (council of trent), போப்பும் அதனை அச்சுறுத்திக்கொண்டேயிருக்கின்றனர்.” அதன்பின் ஒருமணி நேரம் தூங்கினார்.

எழுந்தபோது, “நான் மிகவும் சுகவீனமாயுள்ளேன்.நான் பிறந்த இடமாகிய இங்கேயே தங்கியிருத்தல்நல்லதென நினைக்கிறேன்” என்றார். வியர்வை வரும்படியாக அறையில் நடந்து பார்த்தார்; பின், படுத்துசுற்றிலும் அநேகத் துணிகளையும் தலையணைகளையும் வைத்துப்பார்த்தார். ஒன்றும் பலனளிக்கவில்லை.பின்னர் ஜெபிக்கத் தொடங்கினார்: “என் பிதாவே,ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தேவனே, சகலஆறுதலின் ஊற்றே, நான் விசுவாசிக்கிற உமது பிரியகுமாரனை எனக்கு வெளிப்படுத்தியதற்காக நன்றிசொல்கிறேன். அவரையே அறிந்து, பிரசங்கிக்கிறேன்;அவரையே நேசித்து, அவரிலேயே மகிடிநகிறேன்; அவரையே போப்பும், பக்தியற்றோரும் நிந்திக்கின்றனர்.

எனது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, உம்மிடத்தில் என் ஆவியை ஒப்படைக்கிறேன். இம்மைக்குரிய உடலைக் களைய ஆயத்தமாகிறேன். இவ்வாடிநவிலிருந்து நீங்கும் நேரம் நெருங்குகிறது. ஆயினும்,உம்மில் என்றென்றும் நிலைத்து வாடிநவேன் என்றறிவேன். சத்தியபரனாகிய கர்த்தாவே, நீரே என்னைமீட்டுக்கொண்டீர்; உமது கரங்களில் எனது ஆவியைஒப்படைக்கிறேன்.” அவரது கண்கள் மூட, மயக்கநிலைக்குள் ஆடிநந்தார். மறுபடி விழித்த வேளையில்,ஜோனாஸ், “பரிசுத்த தந்தையே, நீங்கள் போதித்தவிசுவாசத்தில் உறுதியோடுதான் மரிக்கிறீர்களா?”என்று கேட்டார். லூத்தர் கண்களைத் திறந்து, கூர்மையாய்ப் பார்த்து “ஆம்!” என்றார். பக்கத்திலிருந்தோர்பார்த்துக்கொண்டிருக்கும்போதே வெளிறிப்போனார்;உடல் குளிர்ந்தது; அவரது மூச்சு வேகமும் குறைந்துகொண்டே வந்தது. இறுதியில், ஓர் ஆழமான பெருமூச்சுடன், மார்ட்டின் லூத்தர் உயிர் நீத்தார். மகாஉயிர்த்தெழுதலின் நாள்வரையிலும், அவரது உடல்ஜெர்மனியின் விட்டன்பர்கில் இளைப்பாறிக்கொண்டிருக்கிறது. அந்நாளிலே, அவரோடு நீயும் காணப்படுவாயா???

BYM -அக்டோபர் 2005

Post a Comment

0 Comments