Header Ads Widget

Responsive Advertisement

மன்னுயிர்க்காகத் தன் னுயிர் விடுக்க



மன்னுயிர்க்காகத் தன் னுயிர் விடுக்க
வல்ல பராபரன் வந்தார் ,வந்தார் .- பாரில்

இந்நிலம் புரக்க, உன்னதத் திருந்தே
ஏக பராபரன் வந்தார் ,வந்தார் .-பாரில்

வானவர் பணியுஞ் சேனையின் கருத்தர் ,
மகிமைப் பராபரன் வந்தார் ,வந்தார் -பாரில்

நித்திய பிதாவின் நேய குமாரன்
நேமி அனைத்தும் வாழ வந்தார் ,வந்தார் .-பாரில்

மெய்யான தேவன் , மெய்யான மனுடன்
மேசியா ,ஏசையா வந்தார், வந்தார் .- பாரில்

தீவினை நாசர் ,பாவிகள் நேசர் ,
தேவ கிறிஸ்தையா வந்தார் ,வந்தார் .-பாரில்

ஜெய அனுகூலர், திவ்விய பாலர்
திரு மனுவேலனே வந்தார் ,வந்தார் .-பாரில்

Post a Comment

0 Comments